ஜாய் ஹார்ஜோ கவிதைகள்
தமிழில் : கௌதம சித்தார்த்தன் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பிறந்த வானத்தை நினைவில் கொள்ளுங்கள், நட்சத்திரங்களின் ஒவ்வொரு கதையையும் அறிந்து கொள்ளுங்கள். சந்திரனை நினைவில் வையுங்கள், அவள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். விடியற்காலையில் தோன்றும் சூரிய ஜனனத்தை நினைவில்…
வெள்ளரிச் சூரியன்
கௌதம சித்தார்த்தன் அன்று வழக்கிற்கு மாறாக மேற்கே எழுகிறது சூரியன் கிழக்கில் விழுகிறது என் நிழல் சரியும் அந் நிழலை ஏந்துவாரின்றிக் கவியும் நிலங்களற்ற சூன்யம் கவ்விப் பிடிக்க முற்படும் கணமொன்றில் படீரென வெடிக்கிறது சிரசு ஓராயிரம் வண்டுகளின் சிறகடிப்பு…
கடந்த 69 நாட்களாக சாத்தப்பட்டிருக்கிறது என் கதவு
கௌதம சித்தார்த்தன் மிகவும் வலிமையான அதன்மீது வந்து வந்து மோதித் தட்டாதே என் பிரியமான வண்ணத்துப் பூச்சியே உன் உடலம் சிதைவுபடும் சிறகுகள் சேதமாகிவிடும். என்னால் கதவைத் திறக்க முடியாது. வெளிக்காற்றில் விஷக் கிருமி ஊடுருவியிருக்கிறதென ஓயாமல் தொணதொணக்கின்றன டி…
ஆதிப் பெயல்
கௌதம சித்தார்த்தன் இசை பல்கிப் பெருகுகிறது என் நிலமெங்கிலும் வரலாற்றின் மறைக்கப்பட்ட கனவில் வெடித்தெழுகிறது ஆதிப்பறை என் முப்பாட்டனின் விலா எலும்புகள் கொண்டு வாசிக்கிறேன் அஞ்சாம் கொட்டுத் தாளத்தை. அதிர்கிறது நிலம், உதிர்கிறது கனவு கம்மங்கருதாடிய வயல் வெளிகளினூடே எழுகிறது உன்…
எஸ்ரா பவுண்ட் : மூன்று கவிதைகள்
தமிழில் : கௌதம சித்தார்த்தன் *மரம் நான் அசையாமல் நின்று மரங்களின் நடுவே ஒரு மரமாக இருந்தேன், டாப்னே உருமாறிய லாரல் மரக்கிளையின் வில்லசைவில், முன்பு புலனாகாத விஷயங்களின் சத்தியம் தரிசிக்கிறது மேலும் ஒரு முதிர் தம்பதியரின் கடவுள் தரிசனம் நீண்ட எல்ம் மற்றும் ஓக் மரங்களாக வளர்கின்றன. கடவுள்களை மன்றாடி வேண்டும்…
சுதந்திரம் : பால் எலுவார்ட்
தமிழில் : கௌதம சித்தார்த்தன் எனது பள்ளி நோட்டுப் புத்தகங்களில் என் மேசை மற்றும் மரங்களின் மீது பனி படர்ந்த மணலில் நான் உங்கள் பெயரை எழுதுகிறேன் நான் படித்த எல்லாப் பக்கங்களிளும் மற்றும் அனைத்து வெற்றுப் பக்கங்களிலும் கல், இரத்தம், காகிதம்…
மூன்று மலர்கள்
கௌதம சித்தார்த்தன் மெல்லிய சாம்பல் புகை கமழ மூன்று கோப்பைகளில் தேநீர் மணக்கிறது. அவர்களின் வருகைக்காகக் காத்திருக்கிறேன் காலமும் வெளியுமற்ற ஒரு புதிய திணையில் ஒரு கோப்பை எனக்கானது. மற்றொரு கோப்பை உனக்கானது பர்ரா.. ‘வெற்றுத் தாளை மேம்படுத்துவதே கவிதை’…
கண்ணாடியுள்ளிருந்து
கௌதம சித்தார்த்தன் நான் பார்த்துக் கொண்டிருக்கும் கண்ணாடியில் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பவன் ஒரு வெருகு பூனையாகத்தானிருக்க வேண்டும் அதன் கண்களில் காலத்தில் தொலைந்துபோன ஒரு இரவும் ஒரு பகலும் வேட்கையுடன் மியாவுகிறது கண்ணாடியாளனையும் என்னையும் காலமற்ற ஒரேமாதிரியான தோற்றங்களாக உருவாக்குகிறது காலம். இடைவெட்டிக்கிழிக்கும்…
பூட்டப்பட்ட நகரத்தில் எழுதப்பட்ட 10 கவிதைகள்
கௌதம சித்தார்த்தன் I இந்தக்கவிதை என்னுடையதல்ல. டெத் இன் வெனிஸ் எழுதிய தாமஸ் மன்னினுடையதும் அல்ல. மிக நிச்சயமாக ஆல்பர்ட் காம்யுவுடையதும் அல்ல. பார்வை தொலைத்த ஜோஸ் சரமாகோ? நெவர் ஒருவேளை மரியா ஸ்வெட்டேவாவாக இருக்கலாம். அல்லது பூட்டிய வீடுகளுக்கு முன்…